ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆகியோர்க்கு தொற்று உறுதி – பாலிவுட் பிரபலங்களை மிரட்டும் கொரோனா..!

0

ஐஸ்வர்யா ராய்க்கு அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதால் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாலிவுட் பிரபலங்களை மிரட்டும் கொரோனா..!

corona positive
corona positive

உலகையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸால் உலகமே அச்சமடைந்த உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் மும்பையில் வசிக்கும் பாலிவுட் பிரபலங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குணமாகி நலமுடன் வர வேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜூலை 19 வரை கடைகள் அடைப்பு – வணிகர்கள் சங்கம் அறிவிப்பு!!

இந்நிலையில் அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சனின் மருமகளும் , அபிஷேக்கின் மனைவியும் , நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here