தமிழ்நாடு அரசு துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை போக்குவரத்து கழக சங்கத்தில் உள்ள பணியாளர்கள் சிக்கன நிதி என்ற சேமிப்பு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தங்களது மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சிலர் இந்த திட்டத்தில் இருந்து கடனும் பெற்று வட்டியுடன் திருப்பி செலுத்தி வருகின்றனர். இப்படியாக சேமிக்கப்பட்டு வந்த இந்த பணத்திற்கு 2020-23 ம் ஆண்டுக்கான வட்டி 8 சதவீதமாக கணக்கிட முடிவு செய்துள்ளனர். அதேபோல் கடன் பெற்றவர்களின் இம்மாத ஊதியத்தில் வட்டியை கழித்து மீதமுள்ள பணம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மலேசியா பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய வீரர்!!
இது தொடர்பான முழு விவரங்களை ஜூன் 1ம் தேதி முதல் சங்கத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வரும் உறுப்பினர்களுக்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.