கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா தனது கோர முகத்தை காட்டி பல உயிர்களை காவு வாங்கியது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா இந்தியாவில் காட்டுக்குள் இருந்தாலும் இன்னும் சில நாடுகளில் வீரியத்துடன் பரவி தான் வருகிறது. இப்படி கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் அடங்காத நிலையில் இப்போது உலக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது சீனாவில் தற்போது தெற்கு எல்லையில் இருந்து லாவோஸ் தலைநகர் வியன்டியேனை இணைக்கும் அதிவிரைவு ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான வழித்தடங்கள் சுமார் 422 கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதியில் அமைத்துள்ளது. இதனால் பாதையை அமைக்க காடுகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆனால் இந்த காட்டுப்பகுதியில் அதிக வவ்வால்கள் இருப்பதால் காடுகளை அளிக்கும் போதும் இவைகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வவ்வால்கள் மூலம் உயிரை காவு வாங்க கூடிய பல நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இது குறித்து சீன தூதரகத்திடம் கேள்வி எழுப்பிய போதிலும் அதற்கான விளக்கம் இன்னும் அளிக்கவில்லை. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.