விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை அதிகம் கவர்ந்த தொடரான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்தவர்கள் தான் விஷ்ணு மற்றும் சம்யுக்தா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களில் அவர்கள் இருவருக்கும் பல கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடைசியாக சண்டை முற்றிய நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி பெயரை நாறடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காதலிக்கும் போதே விஷ்ணு சம்யுக்தாவிடம் அந்த நடிகையோடு பேச வேண்டாம். அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவை மேற்கொள்பவர் என்று கூறியுள்ளார்.
அதெல்லாம் சுத்த பொய்.., நான் நல்லாத்தான் இருக்கேன்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் கோபி!!
ஆனால் அந்த நடிகை சம்யுக்தாவின் நெருக்கமான தோழி, அவரை பற்றி எல்லாமே இவருக்கு தெரியும். இருந்தும் விஷ்ணு தனது தோழியை தவறாக பேசுகிறார் என்று அப்போது இருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷ்ணுவிடம், அந்த நடிகையும் சம்யுக்தாவும் ஒரே பாலினத்துடன் தகாத உறவை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், இல்லை என்று சொல்லாமல் உண்மை தான் என்ற அளவுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் அந்த நடிகை வேற யாரும் இல்லை. சிப்பிக்குள் முத்து ஹீரோயினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கும் லாவண்யா தான். இவரை தான் மறைமுகமாக விஷ்ணு சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் ஓப்பனாக சொல்லி இருந்தால் ரசிகர்களிடம் தர்ம அடி வாங்கி இருப்பார் என்று சம்யுக்தா விஷ்ணுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.