தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்து முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு இம்மாதத்தின் இறுதியில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்திற்கு இந்திய வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் lyca நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 2 ஆம் வாரத்திற்கு பிறகு தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு.., உடனே முந்துங்க!!
இப்படி அடுத்தடுத்து இப்படத்தின் படப்பிடிப்பில் காலதாமதம் ஏற்படுவதால், அஜித் இப்படத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்ற தகவல் திரையுலக வட்டாரத்துக்குள் பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ செய்தியும் வெளியாகாத நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.