மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த 4 சதவீதம் உயர்வு AICPI குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை கணக்கிட்டு ஜூலை 1 முதல் மீண்டும் அகவிலைப்படி வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது AICPI குறியீட்டின் படி ஜனவரி மாதம் 132.8 புள்ளிகள், பிப்ரவரியில் 132.7 புள்ளிகள் மற்றும் மார்ச் மாதம் 133.3 புள்ளிகள் என வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிகள் தற்போது உயர்ந்து வருவதால் ஜூலை மாதம் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அறிவிப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த வேலைக்கு ஆட்கள் தேவை.., நெறிமுறைகள் இதுதான்.., வெளியான அறிவிப்பு!!
ஆனாலும் இதுவரை தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியே வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.