தமிழகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதற்காக “மகளிர் இலவச பேருந்து திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநில முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் கிட்டத்தட்ட 258.06 கோடி முறை பயணம் செய்துள்ளதாக சட்டப்பேரவையில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மாதந்தோறும் ரூ.888 வரை பெண்கள் சேமித்து வருவதாகவும் ஆய்வுக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்படி பல தரப்பினரும் வரவேற்கப்பட்டு வரும் இத்திட்டத்தால் அரசுக்கு கூடுதலாக நிதி சுமை ஏற்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதாவது ஆலங்குளம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் “மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பல கிராமங்களிலும் அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆலங்குளம் பகுதியில் பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை உண்டாக்கி உள்ளது.