தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் கடந்த ஏப்ரல் 21ம் தேதி முடிவடைந்த நிலையில், அந்த பட்ஜெட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். சமீபத்தில் இதற்கான பணிகளில் தொடங்கிய அரசாங்கம் இதுவரை 96 டாஸ்மாக் கடைகளை முடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, டாஸ்மாக் கடை வருமானத்தில் தான் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது. டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை. நிர்வாக சீர்திருத்தம் செய்யும் போது, திரித்து கூறுகிறார்கள். இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுக்களை ரூ.5, ரூ 10 க்கு கூடுதலாக விற்ற 1977 பேர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து ரூ 5.5 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.