விஜய் தொலைக்காட்சியில் பேமஸ் சீரியலான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா. அதன் பின்னர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அதுமட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவர்களின் பிரிவு சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர்களின் பிரிந்ததன் காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியே வராமல் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ரக்ஷிதாவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக தனது இணையதள பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவிடம் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் அவருக்கு ரெட் கார்டு கொடுங்கள் என்று விஜய் டீவியிடம் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
இதனாலேயே தினேஷ் – ரக்ஷிதா மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் நம்பிய நிலையில், அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா வெளியே வந்ததில் இருந்து அவருடைய தோழிகள் மீண்டும் தினேஷிடம் சேர சொல்லி அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலைகளை பார்த்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த தினேஷ், இத்தனை நாட்கள் காத்திருந்தது போதும் என்று விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளாராம். அதற்காக லாயரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.