அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி சூடு
கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. மேலும் கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 44 ஆயிரம் இறந்துள்ளதாக கூறப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதிலிருந்து வெளிவருவதற்குள் தற்போது ஒரு கோர சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில் லில் உள்ள தொடக்கப் பள்ளியில் சில மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி எது தெரியுமா?? யாரும் எதிர்பாராத புள்ளி விவரம்!!
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டீனேஜ் பெண்ணாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.