ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது பார்த்திபனுக்கும் ரம்யாவிற்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜீவாவும், காவியாவும் ஓடி வருகின்றனர். மேலும் பார்வதியை அடைத்து வைத்ததால் அவரும் வெளியே வர முடியாமல் தவித்து கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்க இப்பொழுது இன்றைய எபிசோடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பார்த்தி ரம்யா கழுத்தில் கிட்டத்தட்ட தாலி கட்ட சென்று விடுவார். ஆனால் அதற்குள் காவ்யா உள்ளே வந்து விட திருமணம் நின்று விடுமாம். அதுமட்டுமில்லாமல், காவியா பார்த்தியுடன் வாழ விரும்புவதாக சொல்வாராம். மேலும் இதனால் தேவி, ரம்யாவும் சண்டை போடுவார்களாம்.
விவாகரத்தில் இருந்து மீண்டு வந்த சம்மு.., ஆனா அதுல இருந்து வர முடியல.., அவரே வெளியிட்ட செய்தி!
பார்த்திக்கு அந்த நிமிஷம் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்க, அப்பொழுது பார்வதி எப்படியோ தப்பித்து மேடைக்கு வந்து விடுவாராம். கடைசியில் நடந்த விஷயத்தை கூறியதும், பார்த்தி ரம்யாவை கன்னத்தை சேர்த்து அறைந்து விடுவாராம். மேலும் அந்த நேரத்தில், பிரியா போலீஸுக்கு தகவல் சொல்லி விடுவாராம். எப்படியோ கல்யாணம் நின்று விட பார்வதி காவியாவிடம் மன்னிப்பு கேட்பாராம்.