நடிகர் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் நடித்து வரும் நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வசூலிலும் சக்கை போடு போட்டது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்களுக்கு ஆரியன் என்ற பையனும் இருக்கிறார். அதன் பின்னர் இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்காக புதிய அமைப்பை உருவாக்கிய விராட் கோலி- அனுஷ்கா சர்மா!!
அதாவது, அந்த பதிவில், பரவாயில்லை, மறுபடியும் முயற்சி செய்தேன். நான் மறுபடியும் தோற்று போனேன். அதே போல் மீண்டும் கற்றுக்கொண்டேன். நான் கடைசி முறை தோல்வி அடைந்தது என்னுடைய தவறு இல்லை… அது துரோகம் மற்றும் ஏமாற்றம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இரண்டாவது மனைவியும் விவாகரத்து செய்ய போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.