IPL தொடரில் பங்கேற்கும் RCB அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
RCB
சர்வதேச தொடர்களை தாண்டி இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL போட்டிகள் இம்மாத இறுதியில் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் IPL தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளனர். இப்படி இருக்கையில் RCB அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான RCB கடந்த ஆண்டு இறுதி போட்டிக்குள் நுழைய கடுமையாக போராடியது. ஆனால் சில போட்டிகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் காரணமாக பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. இதனால் இந்த ஆண்டு பட்டத்தை வெல்ல வேண்டும் என தீவிர முனைப்பில் உள்ளனர். அந்த வகையில் RCB அணி IPL தொடருக்கான பயிற்சியை வரும் 25 ஆம் தேதி தொடங்க உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்த 3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா??
இதை தொடர்ந்து இந்த ஆண்டு சீசனுக்கான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளனர். MI அணியும் கடந்த ஆண்டு பட்டத்தை தவறவிட்டதால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா நேருக்கு நேர் மோதுவதால் இந்த போட்டியை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.