96 படத்தில், நடித்த நடிகை திரிஷாவுக்கு தான் கதை சொல்ல சென்ற போது, அவர் அந்த கதையை கேட்ட விதம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் சொன்ன உண்மை :
திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் 96. பள்ளிப் பருவ காதல் கதையை, வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரிய அளவில் ரீச் ஆகியது. இந்தப் படத்தின், கதையை நடிகை திரிஷாவிடம் சொல்ல அவர் வீட்டுக்கு சென்றிருந்த போது நடந்த, பல சுவாரசிய தருணங்களை படத்தில் இயக்குனர் பிரேம்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது கதை சொல்ல அவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர்தான் கதவை திறந்து விட்டார். உட்கார்ந்து 20 நிமிடம் கதை சொல்லுங்கள் என கேட்டார். நான் முழுக்கதையும் சொல்ல இரண்டு மணி நேரம் 20 நிமிடம் ஆகும் என்று சொன்னேன். சரி சொல்லுங்க என கேட்க ஆரம்பித்தவர் முதல் பாதி முடிந்ததும், ஒரு மாதிரியாகிவிட்டார்.
மாணவர்களை தவறாக வழிநடத்தும் பாக்கிய லட்சுமி சீரியல்..,ட்ரோலுக்கு தரமான பதிலடி கொடுத்த இனியா!!
பின்பு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படத்தின் 2ம் பாதியை கேட்டு விட்டு ஒரு மாதிரி அழும் நிலைக்கு வந்து விட்டார். அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவர் உட்கார்ந்திருந்தது இப்போதும் என்னால் மறக்க முடியாது என சுவாரஸ்யத்துடன் தெரிவித்துள்ளார்.