சுப்ரமணியபுரம் படத்தில், நடிக்க கமிட்டாகி இருந்தது இந்த வாரிசு நடிகர் தான் என இயக்குனர் அமீர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமீர் பேட்டி:
தமிழ் சினிமாவில், பருத்திவீரன் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் இயக்குனர் அமீர். பருத்திவீரன் படத்தை இவர் எடுத்துக் கொண்டிருந்தபோதே, சுப்பிரமணியபுரம் படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்டிருந்ததாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால், சில காரணங்களால் இந்த படத்தை இவர் தயாரிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நடிகரும், இயக்குனருமான சசிகுமாரிடம் சென்றிருக்கிறது. இது குறித்து பேட்டியில் பேசிய அமீர், இந்த படத்தில் இதற்கு முன்பு நடிக்க இருந்தது நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு தான். ஆனால் அப்போது, அவர் வேறு ஒரு தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கி விட்டதால் இதில் நடிக்க முடியாமல் போனது.
96 பட கதையைக் கேட்டு திரிஷா கதறி கதறி அழுதாங்க., இயக்குநர் பிரேம்குமார் சொன்ன உண்மைகள்!!
பின்னாளில் இந்த வாய்ப்பை விட்டதை நினைத்து அவரே வருத்தப்பட்டாராம். அதன் பிறகு, இதில் நடிகர் ஜெய்யை கமிட் செய்து, சசிகுமார் நடித்து இந்த படம் உருவானது. படம் உருவான பிறகு, சசிகுமார் இதை போட்டுக்காட்ட, மொத்த படத்தையும் பார்த்து நானே மிரண்டு போய் விட்டேன் என அமீர் உருக்கத்துடன் பேசியுள்ளார்.