தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதில் ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்திற்காக கேட்டரிங் ஆர்டரை இழந்து விட கூடாது என்பதற்காக ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸில் சேர்ந்து தற்போது ஓரளவுக்கு ஆங்கிலம் பேசி ராதிகாவுக்கு மூக்குடை கொடுத்துள்ளார் பாக்கியா. மற்றொரு பக்கம் டியூசனுக்கு சென்ற இடத்தில் இனியா சரண் என்பவருடன் கடலை போட்டு பள்ளி படிப்பை கோட்டை விட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இன்று டியூசன் முடித்து விட்டு திரும்பிய இனியா சரனுடன் பேசி கொண்டு தெருவில் நடந்து வருகிறார். அப்போது அங்கு பாக்கியா வருகிறார். அவரை பார்த்த இனியா போச்சு அம்மாவிடம் மாட்டிக்கொண்டோம் என பயப்படுகிறார். ஆனால் பாக்கியா சரணை பார்த்து இனியாவின் டியூசனில் நீ படிக்கிறியாபா? என சாதாரணமாக கேட்கிறார். இப்படியான காட்சிகள் இன்று இந்த சீரியலில் இடம் பெற்றிருந்தது.
அரசு ஊழியர்களே கவனம்., இந்த வார்னிங் உங்களுக்குத்தான்! போக்குவரத்து துறை திடீர் கண்டிஷன்!!
இப்படியான சீன்களை பார்த்த நெட்டிசன்கள் இனியாவிடம் இன்னும் எத்தனை காதல் தான் பண்ணுவாய் என கமெண்ட் செய்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சினிமாவில் பள்ளி பருவ காதல் வந்தால் அதை ஆதரிப்பீர்கள். ஆனால் சீரியல்களில் காதல் சீன்கள் வந்தால் இப்படி குழந்தைகளை தவறாக வழி நடத்துகிறீர்கள் என சீரியல்களை குற்றம் சாற்றுவீர்களா? என நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.