நடிகர் தனுஷ் விவாகரத்து குறித்து தனது அண்ணனான செல்வராகவனிடம் பேசியதை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து விவகாரம்
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படமும், இயக்குனர் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதில் வாத்தி திரைப்படம் படிப்பை பற்றியும், பகாசூரன் படத்தில் பெண்ணின் நடத்தை பற்றியும் தெள்ள தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது இவர்களின் இருவரின் காம்போவில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னர் இவர்களது காம்போவில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் கில்லி போல் சொல்லி அடித்து வெற்றி பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் சமீபத்தில் பகாசூரன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் செல்வராகவன் பேசியது வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, நான் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த போது தனுஷ் என்னிடம் வந்து, இறைவன் உனக்கு ஒரு நல்ல Chance கொடுத்திருக்காரு. இன்னொரு கல்யாணம் தயவு செஞ்சு பண்ணிக்காத.
இப்படியே சிங்கிளா இருந்திரு என்று கூறினார். ஆனால் நான் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டேன். அவர் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டார் என்று கூறினார். இந்த விஷயம் இப்போது இணையத்தில் வைரலாகி வர தனுஷ், ஐஸ்வர்யாவோட சேர்வதற்கு வாய்ப்பு இல்ல போலயே என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.