சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு 10 முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப் போவதாக, சாகர் சிமெண்ட் உரிமையாளர் எஸ் ஸ்ரீகாந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
திடீர் அறிவிப்பு :
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில், கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் வீடு கட்டுவதற்கு தேவையான மணல், தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து இதற்கு மாற்றாக எம் சாண்ட் என்ற பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
என்னதான், மணலுக்கு மாற்றாக புதிய பொருள் களமிறங்கினாலும், சிமெண்ட் தேவையை மக்களால் தவிர்க்க முடியவில்லை. தற்போது சாமானியர்களுக்கு, ஷாக் அளிக்கும் விதமாக பிரபல புகழ்பெற்ற நிறுவனத்தின் சிமெண்ட் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்படி போடு.,இனி பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயம்! ஆவின் நிர்வாகத்தால் ஷாக்கான மக்கள்!!
ஆந்திராவில் இயங்கி வரும், புகழ் பெற்ற சாகர் சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீகாந்த் ரெட்டி, பல கட்ட முயற்சிகளுக்குப் பின் ஒரு மூட்டை சிமெண்ட் விலையை ரூ. 10 முதல் 15 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். தற்போது, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் உபரி பொருளான சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டு இருப்பது சாமானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.