தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலை, தடுத்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை :
தமிழகத்தின் பல இடங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில், வேலை பார்த்த வடக்கன்கள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் தாக்கி கொள்வது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய கொள்கை, ஆனால் இன்று அந்த சகோதரத்துவம் எங்கே போனது? இன்று மனிதநேயமே இல்லாமல், பல இடங்களில் பல மாநிலத் தொழிலாளர்களின் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வர்கள் கவனத்திற்கு., மார்ச் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!
எனவே, அதிகரித்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலை அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தை நம்பி பிழைப்பு நடத்தி வரும் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிவகை செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.