தற்போதைய நவீன யுகத்தில் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. இதனால் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், சில மாநகராட்சி கடைகளின் உரிமையாளர்கள் அலட்சியத்தால் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து “அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத என 2 குப்பை தொட்டியை வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பான் கார்டு தாரர்கள் கவனத்திற்கு., உங்களுக்கு கடைசி சான்ஸ்! இல்லைன்னா, எல்லாம் குளோஸ்!!
மேலும், சென்னையில் உள்ள 94,523 கடைகளிலும் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும் படி 2 குப்பை தொட்டிகளையும் வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி பேருந்து நிலையங்களில் 442 சிறிய குப்பை பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.