தமிழ்நாட்டில் பிறந்து கோலிவுட், பாலிவுட் என அனைத்திந்திய சினிமா திரையுலகில் சிறந்த பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் வலம் வந்துள்ளார். இப்படி பல புகழுக்கு உரிய இவர் நேற்று (பிப்ரவரி 4) தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பழைய மேசை மீது அடிபட்டு தான் மரணமடைந்துள்ளார் என போலீசார் உறுதி செய்துள்ளனர். இதன்படி தற்போது வாணி ஜெயராம் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மறைந்த பாடகி வாணி ஜெயராம் அவர்களின் இசை பணிகளை சிறப்பிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.