ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ”வித்யா நம்பர் 1” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களையும் பிரச்சனையையும் கதாநாயகி தனியாக சமாளித்து வரும் நிலையில் பல ட்விஸ்ட்டுகளுடன் நகர்ந்து வருகிறது.
பிரபல இயக்குனர் கஜேந்தரன் இருதய நோயால் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
மேலும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ”மேக்னா” என்ற பெயரில் நடித்து வருபவர் தான் நடிகை நிஹாரிகா. இவர் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலின் சந்தியாவின் அண்ணியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பரப்பாகி வரும் எபிசோடுகளில் இவர் நடிக்கவில்லை.
இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் இவரிடன் ஏன் தற்போது வரும் எபிசோடுகளில் நீங்கள் நடிக்கவில்லை என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இவர் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது தான் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் இனி இந்த சீரியலில் தான் நடிக்க போவதில்லை என்றவாறு பதில் அளித்துள்ளார். இதை கேட்ட இவரின் ரசிகர்கள் இவர் குறித்து பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.