நடிகர் விஜயகாந்த், தன் படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்து கொடுத்த அந்த சுவாரசிய தருணங்களை பற்றி நடிகர் சூர்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சூர்யா பேட்டி :
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான சூர்யா, 90ஸ் காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தார். இவர் தன் காதல் மனைவி ஜோதிகா உடன் இணைந்து நடித்த முக்கியமான படங்களில் ஒன்று மாயாவி. இந்த படத்தில், விஜயகாந்த் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் என்பதற்காக, அவரிடம் இது குறித்து நேரில் சென்று கேட்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது டாப் ரேஞ்சில் இருந்த, விஜயகாந்த் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார். தன் படத்தில் 2 மணி நேரம் மட்டும் நடித்தால் போதும் என, சூர்யா கேட்டிருக்கிறார். உடனே நாளைக்கு வாங்க செஞ்சு கொடுத்து விடலாம் என விஜயகாந்த்தும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
கணவனுக்காக தயாரிப்பாளர் வீட்டு படியேறிய நயன்தாரா.., சற்றும் செவிசாய்க்காத லைக்கா நிறுவனம்!!
அதன் பிறகு விஜயகாந்தை அழைத்துச் செல்ல நேரில் வந்த சூர்யா, அவர் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்ததால், முடியட்டும் அழைத்துச் செல்வோம் என காத்துக் கொண்டிருந்தார். அதன் சூட்டிங் முடிய கிட்டதட்ட மதிய நேரம் ஆகிவிட்டது.
அதன் பிறகு அவர் சாப்பிட்டுவிட்டு தான் வருவார் என நினைத்துக் கொண்டிருந்தபோது, காரை எடுங்க கிளம்புவோம் என கூறி சூர்யா படத்தின் ஷூட்டிங்குக்கு வந்து விட்டாராம். அதன் பிறகு அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நேரடியாக, தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டாராம். இப்படி சாப்பிட கூட நேரமில்லாமல், தனக்காக மட்டும் இல்லாமல் எல்லோருக்காகவும் உழைத்த ஒரு ரியல் கேப்டன் தான் நம்ம விஜயகாந்த் என சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.