சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரை காதலித்து வரும் நிலையில் இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. பொங்கலுக்காக சொந்த ஊருக்கு அனைவருமே சென்று இருந்த நிலையில் குணசேகரனுக்கு அடுத்தடுத்து செருப்படி விழும் விஷயமாக பல சம்பவங்கள் நடந்தேறியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஈஸ்வரியின் அந்த ஸ்பீச் பலரையும் வெகுவாக ஈர்த்தது. ஆனால் இது கொஞ்சம் கூட குணசேகருக்கு பிடிக்கவில்லை. ஜனனி மற்றும் அப்பத்தாவின் ஆட்டத்தை பார்த்து அவர்களை தீர்த்து கட்ட முடிவெடுக்க ஆள் வைத்து அடிக்கிறார். அதில் அப்பத்தா தப்பித்து விட ஜனனிக்கு அடிபட்டு இப்பொழுது தான் குணமாகி மீண்டு வந்துள்ளார்.
தளபதி 67ல் இந்த பிளாப் நடிகை கன்பார்ம் ., படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இப்படி இருக்க இப்பொழுது ஆதிரையை வைத்து தான் பிரச்சனை நகர்ந்து கொண்டு உள்ளது. அதாவது ஆதிரை அருணை காதலித்து வருவதால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை. ஜனனி அப்பொழுது ஆதிரைக்கு முழு சப்போர்ட்டாக இருந்து வருகிறார். எப்படியும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பேன் என்பதில் குறியாக இருக்கிறார்.
ஆனால் குணசேகரன் இதற்கு முழு எதிர்ப்பையும் காட்டி வருகிறார். இப்படி இருக்க ஆதிரைக்கும் அருணுக்கும் யாருக்கும் தெரியாமல் ஜனனியும் அப்பத்தாவும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதனால் பெரிய பூகம்பமே ஏற்படுமாம். மேலும் ஆதிரை இனிமேல் தான் ஜனனியை கொடுமை செய்ததை நினைத்து கூனி குறுகி போவாராம்.