ஜூனியர் (U19) மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரை இந்திய இளம் அணி வென்றதை பாராட்டும் விதமாக பிசிசிஐ முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ஜெய் ஷா:
ஜூனியர் (U19) மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் முதல் சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில், 6 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஒன்றில் தோல்வியை தழுவி இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி போட்டியிட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 68 ரன்களுக்குள் சுருட்டியதுடன், 14 வது ஓவரிலேயே இலக்கையும் அடைந்து உலக கோப்பையை தட்டிச் சென்றது. முதல் சீசனை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில், பிசிசிஐயின் செயலாளரான ஜெய் ஷா, இவர்களை பாராட்டும் விதமாக ஒரு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி இப்படி ஒரு காரணம் இருக்கா?? வெளிப்படையாக கூறிய சூர்யகுமார் யாதவ்!!
அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது டி20 போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை காண, உலக கோப்பையை வென்ற இந்திய U19 மகளிர் அணியை ஜெய் ஷா அழைத்துள்ளார். அங்கு இவர்களில் உலக சாதனையை கொண்டாடுவோம் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.