நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி இப்படி ஒரு காரணம் இருக்கா?? வெளிப்படையாக கூறிய சூர்யகுமார் யாதவ்!!

0
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி இப்படி ஒரு காரணம் இருக்கா?? வெளிப்படையாக கூறிய சூர்யகுமார் யாதவ்!!
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி இப்படி ஒரு காரணம் இருக்கா?? வெளிப்படையாக கூறிய சூர்யகுமார் யாதவ்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணி, வெற்றி பெற முக்கிய பங்கு வகித்த சூர்யகுமார் யாதவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், 2வது டி20 போட்டி நேற்று உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டியில் 100 ரன்களை துரத்திய இந்திய அணி, 14.3 ஓவரில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதன் பிறகு, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஜோடி நிதானமாக விளையாடி வெற்றிக்கு வழி வகுத்திருந்தனர். இவர்களில், சூர்யகுமார் ஒரு பவுண்டரியுடன் 26* ரன்கள் எடுத்ததால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை ஹாக்கி…, 3 வது முறையாக பட்டத்தை வென்ற ஜெர்மனி!!

இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து சூர்யகுமார் யாதவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர், வாஷிங்டன் சுந்தர் வெளியேறியவுடன் நான் தான் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். பிட்ச் சரியாக இல்லாததால் கடைசி ஓவரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் தான், ஹர்திக் பாண்டியா என்னிடம் வந்து, (19.5) இந்த பாலுடன் நீ ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறிய பிறகு, நம்பிக்கையுடன் பந்தை தூக்கி அடித்து, வெற்றியை உறுதி செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here