நாடு முழுவதும் பெண்கள் நிதி ரீதியாக மேம்பட பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. மேலும் தேர்தலின் போது சலுகைகளையும், வாக்குறுதிகளையும் போட்டியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடிக்கு ஆளாவதாக பா.ஜ.க. புகார் செய்து வந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய பிரதேச முதலமைச்சர் சௌஹான் தேர்தல் வாக்குறுதியாக சலுகை திட்டத்தை தெரிவித்துள்ளார். அதாவது ஏழை மற்றும் நடுத்தர பெண்களின் நலன் கருதி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் பிற நல திட்டங்களில் பயன் பெறுபவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அம்மாநில அரசு இத்திட்டத்துக்காக 5 ஆண்டுகளில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.