ஒடிசாவில் பொது கூட்டத்திற்கு சென்ற சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நேற்று மதியம் 1 மணி அளவில் பிரஜ் ராஜ் நகர் பகுதியில் அமைச்சர் சென்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அங்கு காரை விட்டு இறங்கும் போது காவல்துறை உதவி துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ் தனது ரிவால்வரால் அமைச்சரின் மார்பு பகுதியில் இரண்டு குண்டுகளை பாய்த்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலே மயக்கமடைந்த அமைச்சரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் உரிய சிகிச்சை வழங்கியும் பலனின்றி அமைச்சர் நபா கிஷோர் உயிரிழந்தார். இந்நிலையில் ASI கோபால் தாஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை கண்டறிய முடியவில்லை என காவல் கண்காணிப்பாளர் குப்தேஸ்வரர் கூறியுள்ளார். எனவே அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்து வருகிறார்.