நடிகை ஜோதிகா நடித்து வரும் SRI படத்தை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜோதிகா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு ஆகியோருடன் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, நடிப்புக்கு பிரேக் கொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது பெண்கள் மையப்படுத்தி இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. தற்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பரிவன் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்ரீ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த பாலிவுட் படத்தை துஷார் ஹிரானந்தானி இயக்க, ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது போஷனை நடித்து முடித்து விட்டதாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவர், கனத்த இதயத்துடன் ஸ்ரீ படத்தில் என்னுடைய போஷன்களை நடித்து முடித்து விட்டேன். தற்போது ஸ்ரீ படத்தில் இருந்து விடைபெறுகிறேன். மேலும் இந்த படக்குழுவினர்களுடன் வேலை பார்த்தது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த துஷார் ஹிரானந்தானி அவர்களுக்கு நன்றி. அதேபோன்று நடிகர் ராஜ்குமார் ராவின் மிகப்பெரிய ரசிகைகளில் நானும் ஒருவர். பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படக்குழுவினருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார். ஒரு நடிகனாக இந்த அணியில் இருந்து நான் திரும்ப பெறுவது என்னவென்றால் அது என்னுடைய வளர்ச்சி மட்டுமே என்று கூறியுள்ளார்.
View this post on Instagram