தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள், மாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேதி மாற்றம்:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் தேதிகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வு நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில், இந்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த தேர்வுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பொதுத்தேர்வு எழுதும் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள் மார்ச் 6 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்வை முன்கூட்டியே நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(30.01.2023)-முழு விவரம் உள்ளே!!!
இது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்முறை பொதுத்தேர்வு குறித்த புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அரசின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெரியாமல் மாணவர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.