இரட்டை சதத்திற்கு பிறகு பார்மின்றி தவிக்கும் இஷான் கிஷன், இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்ப முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.
இஷான் கிஷன்:
கடந்த ஆண்டு பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் போட்டியில், தனது முதல் இரட்டை சதத்தை அடித்து எதிரணியை மிரள வைத்தவர் இஷான் கிஷன். இவர், இந்த இரட்டை சதத்திற்கு பிறகு, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ரன் எடுக்கவே தடுமாறி வருகிறார். இவர் 1, 2, 5, 8*, 17 மற்றும் 37 சொற்ப ரன்களிலேயே வெளியேறினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால், இவரது பார்ம் தற்போது கேள்வி குறியாகி உள்ளது. ரோஹித் சர்மா இல்லாத நிலையில், இஷான் கிஷன் தொடக்க வீரராகவும், சில போட்டிகளில் நடுகள வீரராகவும் களமிறங்கி வருகிறார். தனது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ள இவர், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இடம் மாறி மாறி விளையாடுவதால் தான் ரன் எடுக்க தடுமாறி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
ஹர்திக் பாண்டியா இதுல சொதப்புனா அவ்ளோதான்.., தல தோனியின் அறிவுரை!!!
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், தொடக்க வீரராக தான் களமிறங்குவார் என ஹர்திக் பாண்டியா கூறி உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனது பார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் இஷான் கிஷன் இறங்கி உள்ளார். இதற்கிடையில் இஷான் கிஷன், கிரிக்கெட்டில் தோனியை பார்த்து தான் வளர்ந்து வந்தேன். இந்திய அணியில் இவரது இடத்தை நான் பூர்த்தி செய்ய முயற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.