நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் உடல்நலம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி:
கோலிவுட் வட்டாரங்களில் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்து, தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி இப்போது பிச்சைக்காரன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் போது விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பின்னர் முகத்தில் அறுவை சிகிச்சை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மலேசியாவில் சென்று பார்த்தனர். விஜய் ஆண்டனியின் உடல்நலம் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் விஜய் ஆண்டனி, கோமாவுக்கு சென்று விட்டார், ரொம்ப சீரியஸாக இருக்கிறார் என இணையத்தில் தகவல் பரவின.
பிளாப் படத்தின் அடுத்த Part ல் கமிட்டான விஜய் சேதுபதி., தெரிஞ்சே அந்த புதை குழில விழ போறீங்களா?
தற்போது இந்த தகவல்கள் குறித்து இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார். அதாவது விஜய் ஆண்டனி தற்போது நலமாக இருக்கிறார். அவர் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சென்னைக்கு வந்துவிட்டார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் ரெஸ்ட் எடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி விரைவில் வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசுவார். எனவே ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இதை தொடர்ந்து அவர் உடல்நலம் குறித்து வெளியாகும் பொய்யான தகவலை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.