இயக்குனர் சுந்தர்.சி அடுத்து இயக்க இருக்கும் படத்தை குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அரண்மனை 4
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. அந்த வகையில் இவர் இயக்கிய அருணாச்சலம், அன்பே சிவம், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் அரண்மனை திரைப்படம் நன்றாக ஓடிய நிலையில், அதற்கடுத்து வெளியான பாகம் 2 மற்றும் 3 கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி அடுத்து இயக்க இருக்கும் படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
“love today” பாணியில் மணப்பெண்ணிடம் போனை மாற்றிய இளைஞர்.., குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்!!
அதாவது இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை பார்ட் 4 எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக சுந்தர்.சி – விஜய் சேதுபதி கூட்டணி உருவாகியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த காபி வித் காதல் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.