விரைவில் டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்…, வெளியான அப்டேட்!!

0
விரைவில் டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்..., வெளியான அப்டேட்!!
விரைவில் டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்..., வெளியான அப்டேட்!!

சமீபத்தில் கார் விபத்துக்கு உள்ளான இந்திய அணியின் ரிஷப் பண்ட் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சமீபத்தில் கார் விபத்துக்கு உள்ளாகி இருந்தார். இந்த விபத்தில், தலை, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட இவர் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். இவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு, மூன்று வித அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த விபத்து நடந்து, கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம் தான் ரிஷப் பண்ட், தனது டிவீட்டர் பக்கத்தில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியதுடன், விரைவில் மீண்டு வருவேன் என்று பதிவிட்டிருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலபரீட்சை…, வெற்றியுடன் தொடங்க போவது யார்??

இதன் மூலம், ரிஷப் பண்ட் கூடிய விரைவில் பரிபூரணமாக குணமடைந்து அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், ரிஷப் பண்ட் 2 வாரங்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும், 2 மாதங்களில் வாழ்க்கையின் புதிய பயணத்தை தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here