மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப வாகனங்கள் பெருகி வருவதால் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனால் சாலை விபத்து, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் தெளிவாக தெரிய LED கம்பம் போன்ற பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி தற்போது சென்னையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி தப்பி வருகின்றனர். இதனால் வாகனங்களின் நம்பர் பிளேட் போக்குவரத்து விதிமுறைப்படி முறையாக இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்துகின்றனர்.
சென்னை வாசிகள் கவனத்திற்கு., 4 நாட்களுக்கு போக்குவரத்தில் அதிரடி மாற்றம்! வெளியான அறிவிப்பு!!
மேலும் Yellow போர்டு மற்றும் White போர்டுகளில் எழுத்து கருப்பு நிறத்தில் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அளவில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத வாகனங்களுக்கு அபராதமும் மற்றும் உடனடியாக நம்பர் பிளேட் மாற்றி அமைத்து கொண்டு வரும் பட்சத்தில் வாகனம் ஒப்படைக்க படுகிறது. இதனால் பிடிபட்ட வாகனத்தின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் போலீசார் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி வருகின்றனர்.