கொரோனா அச்சுறுத்தல் தடை உத்தரவு கடந்த ஆண்டு முதல் தளர்த்தப்பட்டு வருவதால் தமிழ்நாடு தேர்வாணையம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு ஆணையத்துடன் இணைக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. மாணவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் பணி ஆதலால் புகழ் பெற்ற பல்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட தரமான வினாத்தாள்கள் தயாராகி வருகிறது.
டோக்கன் இல்லாதவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்., தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
மேலும் இந்த தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்புவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரி தேர்வுகளில் பணி அனுபவ அடிப்படையில் வழங்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் (15) ஆசிரியர் தேர்வில் கிடையாது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக காத்திருந்த தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.