உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கலை நிகழ்ச்சி, ஜல்லிக்கட்டு என பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் அடங்கிய இந்த பொங்கல் பரிசை இன்று (09.01.2023) முதல் ஜனவரி 13ம் தேதி வரை ரேஷன் கடையில் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேதி, நேரம் குறிப்பிட்டுள்ள டோக்கன் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்., இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இதையடுத்து தற்போது குடும்ப அட்டைதாரர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாவிட்டால் திரும்ப பெற மறு வாய்ப்பு அளித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.