2023 ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று(09.01.2023) காலை 10 மணியளவில் தொடங்கியது. ஆண்டுதோறும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சட்டப்பேரவையில் கலந்து கொண்டனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த கூட்டத்தில் ஆளுநர் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை, புயல் என அனைத்து காலநிலை மாற்றங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. மேலும் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும், காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியது.” என கூறினார்.
மன உளைச்சலுக்கு ஆளான வழுக்கை தலையினர்.., நஸ்ட ஈடாக மாதம் ரூ 6,000 வழங்க அரசுக்கு மனு!!
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் கலாச்சார பொக்கிஷமாக இருக்கும் மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் 500 மின்சார பேருந்துகள் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.