சின்னத்திரை ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் அவரை நினைத்து உருகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை போட்டுள்ளார்.
சின்னத்திரை ரக்ஷிதா :
சின்னத்திரை சீரியல்களில் நடித்து, தற்போது இளவரசியாக வலம் வருபவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் அறிமுகமான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தார். இதற்கடுத்து கணவனும் மனைவியும் சேர்ந்து ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலில் நடித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த நாடகமும் ஹிட் அடித்தது. இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்த வந்த ரக்ஷிதாவின் ரியல் வாழ்க்கையில் பூகம்பம் வெடித்தது. அதாவது தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ரக்ஷிதாவை நினைத்து தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
அதாவது ரக்ஷிதா மற்றும் தினேஷ் நடித்த நாச்சியார்புரம் சீரியல் புரோமோவை பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டோரியை வைத்து பார்க்கும் பொழுது அவர் ரக்ஷிதாவை இன்றும் மனதில் நினைத்து வருகிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியே வந்ததும் தினேஷுடன் சேருவாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram