பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் குமரன், சினிமாவுக்காக தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குமரன் பதிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் குமரன். மிகச் சிறந்த நடன கலைஞரான இவர், சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான, வதந்தி என்ற வெப் சீரிஸில் அட்டகாசமாக நடித்து மிகப்பெரிய இடத்தைப் பெற்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் தன் சினிமா கெரியர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட், கூட்டத்தில் 20 பேருடன் நின்று கை தட்டும் காட்சி போன்ற சின்ன சின்ன ரோல் தான் கிடைத்தது. ஒரு youtube சேனலில் நடிக்கும் வாய்ப்பை கூட அன்று பெரிய வாய்ப்பாக நினைத்து அதை சூப்பராக செய்தேன்.
இன்று அமேசான் பிரைமில் நடிக்கும், வாய்ப்பு கிடைக்கிறது என்றால் சினிமாவில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் தான் இதற்கு காரணம். எப்பவுமே நான் தேர்ந்தெடுக்கும் ஒரு கதையில் ஸ்கிரிப்ட் மற்றும் கண்டன்ட் இருக்கிறதா? என்று மட்டும் தான் பார்ப்பேன். அது இருந்தா உடனே ஓகே சொல்லிடுவேன். சினிமாவில் இப்போ எனக்கு கிடைச்சிருக்கிற இடத்துக்காக நிறைய போராடினேன் என உருக்கமாக பேசியுள்ளார்.