சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில், நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை அபிநவ்யா மீண்டும் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.
வெளியான அப்டேட் :
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் 1 தொடர்களில் ஒன்று கயல். டிஆர்பியில் இந்த சீரியலுக்கு போட்டியாக, இதுவரை எந்த தொடராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த தொடரில் இருந்து, சமீபத்தில் வெளியேறிய நடிகை அபி நவ்யா மீண்டும் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. பிரசவம் காரணமாக, இவர் இந்த தொடரில் இருந்து விலகினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கடந்த நவம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தை பிறந்த ஒரு மாத இடைவெளிக்கு பின், இவர் மீண்டும் சீரியலில், அதே கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இதில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் குறித்த காட்சிகள் இரண்டு வாரங்களாக சீரியல் காட்டப்படவில்லை.
இனியாவது இவர் காட்சிகள் காட்டப்படுமா? அல்லது உண்மையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. விரைவில் இது குறித்து அப்டேட்டை வெளியிட வேண்டும் என பலரும் சீரியல் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.