இந்தியா vs இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 தொடர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக நேற்று நடந்த 2 வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இலங்கை தொடர்களுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் சர்வதேச ஒருநாள் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதால் சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் தற்போது சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் போன்றோர் ஓய்வில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு விருந்தாவனம் சென்றுள்ளார். இவர்களின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.