வைகைப்புயல் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைகைப்புயல் வடிவேலு:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞனாக ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் வடிவேலு. தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் பெரிய எதிர்பார்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு இன்டெர்வியூவில் ரஜினி, கமல் குறித்து வடிவேலு பேசியது வெளியாகியுள்ளது. அதவாது தற்போதைய சினிமாவில் யாரையாவது கிழிகிழினு கிழித்தால் பணம் சம்பாதிக்கலாம் என் ஒரு குரூப் இருக்குது. யூடியூபில் பேமஸ் ஆகணும் என்ற பெயரில் ஏதாவது முன்னணி நடிகர்களை திட்டி வீடியோ போடுவது.
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் தேதி வெளியீடு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
சொல்லப்போனால் ரஜினி மற்றும் கமலை கிழி கிழின்னு கிழித்து, வீடியோ பதிவு செய்துஅதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு குரூப் திரிகிறது என்று தெரிவித்தார். இப்படத்தை தொடர்ந்து மாமன்னன் , சந்திரமுகி 2 மற்றும் விஜய்சேதுபதி ஒரு படம் போன்ற படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நான் உயிரோட இருக்குற வர மக்கள் சிரிக்க வச்சுட்டே இருப்பேன் என்று மன நெகிழ்வுடன் கூறியுள்ளார்.