IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இளம் வீரர் இந்திய அணிக்காக தனது அறிமுக போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.
குல்தீப் சென்
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இப்படி இருக்கையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குல்தீப் சென்
அறிமுகமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் IPL தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பந்து வீச்சில் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசி அசால்டாக பேட்ஸ்மேன்களை சாய்க்க கூடிய திறமை வாய்ந்தவர். இப்போது இவர் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி தனது கிரிக்கெட் பயணத்தை வெற்றிகரமாக தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகும் 250 வது இந்திய வீரர் என்ற புகழை அடைந்துள்ளார். அவரது பர்சனல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவரின் தந்தை ஒரு சலூன் கடை நடத்தும் தொழிலாளி ஆவார். ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு வீரராகவும் இன்று இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். தனது முதல் போட்டியில் இவர் வெற்றிகரமாக தொடங்கி பல சாதனைகள் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.