தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு, டிசம்பர் 5 ஆம் தேதியான நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதிரடி அறிவிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர் விடுமுறைக்கு பின் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து சீராக இயங்கி வருகிறது. இந்த நிலையில், பண்டிகை மற்றும் முக்கிய தலைவர் தினங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 5 ஆம் தேதியான நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் வரை சிறப்பாக நடைபெறும் இந்த விழாவில் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவின் சந்தனக்கூடு நிகழ்வு பிரசித்தி பெற்ற ஒன்று.
வேலை தேடும் சென்னை வாசிகளா நீங்கள்?? Dexter Academy வழங்கும் அரிய வாய்ப்பு,, முழுவிபரம் உள்ளே!!
வெளியூர்களில் இருந்தும் பலரும் திருவிழாவை காண வருவதால், மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு டிசம்பர் 5ஆம் தேதி முழு விடுமுறை அளிப்பதாகவும், இதை ஈடுகட்ட டிசம்பர் 10 ஆம் தேதி முழு வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.