இந்திய வீரரை துரத்தும் விமர்சனம்…, பதிலடி கொடுத்த பயிற்சியாளர்!!

0
இந்திய வீரரை துரத்தும் விமர்சனம்..., பதிலடி கொடுத்த பயிற்சியாளர்!!
இந்திய வீரரை துரத்தும் விமர்சனம்..., பதிலடி கொடுத்த பயிற்சியாளர்!!

ரோஹித் சர்மாவின் பார்ம் அவுட் குறித்து தொடரும் விமர்சனத்திற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

ரவி சாஸ்திரி:

பங்களாதேஷிற்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரை விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில், டி20 உலக கோப்பைக்கு பிறகு, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, கே எல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள், அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்களில், விராட் கோஹ்லி ஆசிய கோப்பையில் இருந்து தனது பார்மை மீட்டு டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவருக்கு ஒருநாள் தொடர் எவ்வாறு அமையும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், ரோஹித் சர்மாவோ, நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கூட பார்மின்றி தான் தவித்து வருகிறார். இதனால், பார்ம் அவுட் என்று பல்வேறு விமர்சனங்களுக்கு ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர், ரவி சாஸ்திரி விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

ENG vs PAK: புதிய ரெக்கார்ட் படைத்த தொடக்க வீரர்கள்…, ஒரே தொடரில் குவியும் சாதனை!!

அவர் கூறியதாவது, பார்ம் அவுட் என்பது ஒரு கட்டத்தில் அனைத்து வீரர்களும் சந்திக்க வேண்டியது தான். தோனி, கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட அனைவரும் இந்த நிலையை கடந்து தான் வந்துள்ளார்கள். மேலும், ஏற்ற இறக்கங்கள் என்பது விளையாட்டு வீரர்களுக்கு வருவது சாதாரண ஒன்றுதான் என்று கூறியுள்ளார். இதனால்நாளை நடைபெற இருக்கும் போட்டியில், விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here