சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை கேரள அரசு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐயப்பன் கோவில்
வருடந்தோறும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல லட்ச பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவலின் மூலம் குறைந்த அளவிலான பக்தர்களை அனுமதித்தனர்.ஆனால் இந்த ஆண்டு எந்தவிதமான தடைகள் இல்லாமல் அய்யனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணம் செய்து வரும் பக்கதர்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி அரசு பேருந்து மூலம் பம்பைக்கு வரவேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏனென்றால் தினமும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் பக்கதர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளன. அனைத்து வாகனங்களும் நிறுத்த பம்பையில் போதிய வசதி இல்லை. இதனால் பம்பையில் இருந்து 21 கி.மீ. தூரமுள்ள நிலக்கல்லில் தான் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் அனைத்து வாகனங்களும் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.