நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், ஐடி விதிகளை மீறியதாக கூறி 23 லட்சம் பயனர்களின் whatsapp கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்டா அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும், சோசியல் மீடியா ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். சமீபத்தில், இந்த செயலி உபயோகிப்போர்களின் தரவுகள், ஹேக்கர்களால் திருடி விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்காக மெட்டா நிர்வாகத்திற்கு, பல லட்சம் மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியா முழுவதும் ஐ டி விதிகளை மீறியதாக கூறி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களின் whatsapp கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதில் 8,72,000 பயனர்களின் கணக்குகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., ஓய்வூதிய பணப்பலன் கன்பார்ம்!1,241 பேருக்கு வழங்க அதிரடி!!
இதுகுறித்து பேசிய வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர், பயனர்களின் புகார், தவறான செய்தியை பகிர்தல், எதிர்மறை கருத்துக்களுக்கு பதிலளித்தல் மற்றும் போலி கணக்குகள் போன்ற காரணங்களுக்காக பயனர்களின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாகவும், வாட்ஸ் அப்பில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்தார்.