விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், செய்த காரியம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராபர்ட் மாஸ்டர்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, 8 வாரங்களை தாண்டியும் அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த வார எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் இவர் அதிரடி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது இவர் உள்ளே இருந்தவரை, சீரியல் நடிகை ரக்ஷிதா உடன் அதிக நெருக்கத்துடன் பழகி வந்தார். டாஸ்காக இருந்தாலும், நார்மலாக இருந்தாலும் ரட்சிதாவுடன் அதிக நேரத்தை செலவிட்டு வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் ரட்சிதாவுடன் ராபர்ட் மாஸ்டர், பழகியதை பார்த்த ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், இது குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதன்படி ராபர்ட் வெளியே வந்ததும் ரக்ஷிதா உடன் தான் நட்பாக மட்டுமே பழகினேன். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்று சொல்வார் பாருங்களேன், என்று தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் 6 : யார் சொன்னாலும் கேட்க முடியாது? மீண்டும் ஆரம்பித்த அசீம்! விக்ரமன் எடுத்த முடிவு!!
அவர் சொன்னது போலவே, ராபர்ட் வெளியே வந்ததும் தன் முதல் வீடியோவில், ரக்ஷிதா உடன் நான் நட்பாக மட்டுமே பழகினேன் என்றும், அதை வெளியே இருந்து பார்ப்பவர்கள் தவறாக எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட, ரசிகர்கள் அன்றே கணித்தார் தினேஷ் என, ரக்ஷிதா கணவரின் கருத்து குறித்து பதிவிட்டு வருகின்றனர்.