புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணியை, UP யோதாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி 2 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
புரோ கபடி:
ஹைதராபாத்தில் புரோ கபடி லீக் தொடரின் இறுதி கட்ட சுற்றுகள், 12 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால், அந்த முதல் 6 இடங்களை பிடிக்க, 12 அணிகள் தீவிரமாக மோதி வருகின்றன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வகையில், நேற்று UP யோதாஸ் அணிக்கு எதிராக பெங்கால் வாரியர்ஸ் மோதியது. இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், போட்டியானது கடைசி வரை பரபரப்புடனே நகர்ந்தது. இதில், UP யோதாஸ் ஒரு புள்ளி வித்தியாசத்தில் (33-32) பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையில் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின், ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 48-28 என்ற புள்ளிக் கணக்கில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதில், பெற்ற வெற்றியின் மூலம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 64 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறியது. UP யோதாஸ் 60 புள்ளிகளுடன் 4 வது இடத்தை பிடித்துள்ளது.